இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்? பதில்:- மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம். நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது. நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கர...
யோக விஞ்ஞானம் கேள்வி :- வாசியோக பயிற்சிகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது விளக்க வேண்டுகிறோம் பதில் :- இயற்கையை, அதன் இயங்கும் முறைகளை முற்றிலுமாக ஆராய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகளே மெய்ஞானிகளாகும்.அவர்கள் கண்டறிந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு பிராணசக்தியாகும். இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அதே சக்திதான் பிரபஞ்சத்துள் இருக்கும் அனைத்து படைப்புகளையும் இயக்குகிறது.அதே சக்திதான் தனிம உலகையும்,தாவர உலகையும், விலங்கு உலகையும் இயக்குகிறது. எப்படி மின்சாரம் என்பது Heater, AC,fan,iron box,car, tubelight போன்ற எல்லா கருவிகளையும் இயக்க வல்லதோ அவ்வாறே அந்த படைப்பு சக்தியே ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் இருந்து அதை இயங்க வைக்கிறது. அவ்வாறே நம் உடலிலும் அந்த உயிர்சக்திதான் நம்மை இயங்க வைக்கிறது என்பதை மிகப்பெரும் விஞ்ஞானிகளான நம் மெய்ஞானிகள் கண்டறிந்தனர். அந்த உயிர்சக்தியை நம்முள் உருவாக்குவதற்கே சுவாசிக்கிறோம் .ஒவ்வொரு பொருளும் எரிவதற்கு Oxygen அவசியம் என்பதை 200 வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தனர்.ஆனால் அனைத்து உயிரினங்களும் சுவாசித்தலின் முலமாக Oxygenஐ சுவாசித்து ...
Comments
Post a Comment