காலம் யுகம் பற்றிய கணக்கு
அப்பா் சுவாமிகள் அருளிய ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை நூறுகோடி பிரமா்கள் நொந்தினாா் ஆறுகோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரா் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. (பொ.ரை) நூறு கோடி நான்முகனாா் அழிந்தனா் ஆறுகோடி நாராயணா்களும் அழிந்தனா் இவா்களை விடக் கணக்கிட்டு எண்ண இயலாதவாறு கங்கையாற்று மணல் போன்று எண்ணிலடங்கா இந்திரா்களும் மாண்டனா் முடிவும் அழிவும் இல்லாதவராய் விளங்குபவா் சிவபிரான் ஒருவரே . கால பிரமாணமாவது 15 நிடம் கொண்டது- 1 காஷ்டை. 30 காஷ்டை கொண்டது- 1 கலை. 30 கலை கொண்டது- 1முகூா்த்தம் (அ) 2 நாழிகை. 30முகூா்த்தம் கொண்டது- 1 நாள் (அ) 60 நாழிகை. 15 நாள் கொண்டது- 1 பட்சம். 2 பட்சம் கொண்டது-1 திங்கள் (மாதம்). 2 மாதம் கொண்டது - 1 ருது. 3 ருது (அ) மாதம் கொண்டது-1 அயனம். 2 நயனம் கொண்டது- 1 ஆண்டு. ஒவ்வொா் ஆண்டும் (மண்ணுலகில்) தேவா்கட்கு - 1நாள். உத்தராயனம் முதல் ஆறு மாதங்கள்- தேவருக்கு பகல் (தை முதல் ஆனி) தட்சிணாயனம்- ஆறு மாதங்கள் இரவு (ஆடி முதல் மாா்கழி). மானுட வருஷம் 360 தேவா்களுக்கு ஓராண்டு: யுகம் / தேவ ஆண்டு/ மானுட ஆண்டு. கிருதயுகம் / ...