Posts

Showing posts from September, 2023

லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?

 கேள்வி :- லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?  பதில் : நான்் முன்பே கூறியது போல முன்னோர்கள் கூறிய கதைகளில் விஞ்ஞான உண்மை பொதிந்து இருக்கும். தீவீரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியை உருவாக்குவார்கள். வேறு ஒருவருக்கும் அது புரியாது. அது போலவே இறை தேடுதலில் தீவீரவாதிகளாகிய ஞானிகளும் , தாம் அறிந்த இறை ஞானத்தை பகிர்ந்து கொள்ள பாடல் ,கதை மூலம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர். இது இன்னொரு தீவீரவாதிக்கு மட்டுமே புரியும்.  இக்கதையில் வரும் ப்ரம்மா என்பவர்கள், போலி மதவாதிகள். ப்ரம்மா முடியைக் கண்டு விட்டேன் என்று கூறுவதைப் போல , போலி மதவாதிகளும் இறைவனைப் பார்த்து இப்போதுதான் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறுவார்கள். இக்கதையில் விஷ்ணு என்பவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிப் பார்ப்பதைப் போல , விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றனர். தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் உலகை காப்பாற்றுவதாக கூறுகின்றனர்.இவர்களே காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் விஷ்ணு ,தன்னால் சிவனின் அடியை காண ம...

மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வழிமுறை

 ஒன்றும் செய்யாமல் "சும்மாயிரு" என்று சில ஞானிகள் சொல்கிறார்கள். சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள் அவற்றை செய்யச் சொல்கிறார்கள். நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம். யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் பதில் :-  சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும். ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும்.  இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள் ஜீவன் முக்தியை அடைய பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவ...

யோக விஞ்ஞானம் வாசியோகம்

Image
 யோக விஞ்ஞானம் கேள்வி :- வாசியோக பயிற்சிகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது விளக்க வேண்டுகிறோம்  பதில் :- இயற்கையை, அதன் இயங்கும் முறைகளை முற்றிலுமாக ஆராய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகளே மெய்ஞானிகளாகும்.அவர்கள் கண்டறிந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு பிராணசக்தியாகும்.  இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அதே சக்திதான் பிரபஞ்சத்துள் இருக்கும் அனைத்து படைப்புகளையும் இயக்குகிறது.அதே சக்திதான் தனிம உலகையும்,தாவர உலகையும், விலங்கு உலகையும் இயக்குகிறது.  எப்படி மின்சாரம் என்பது Heater, AC,fan,iron box,car, tubelight போன்ற எல்லா கருவிகளையும் இயக்க வல்லதோ அவ்வாறே அந்த படைப்பு சக்தியே ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் இருந்து அதை இயங்க வைக்கிறது. அவ்வாறே நம் உடலிலும் அந்த உயிர்சக்திதான் நம்மை இயங்க வைக்கிறது என்பதை மிகப்பெரும் விஞ்ஞானிகளான நம் மெய்ஞானிகள் கண்டறிந்தனர். அந்த உயிர்சக்தியை நம்முள் உருவாக்குவதற்கே சுவாசிக்கிறோம் .ஒவ்வொரு பொருளும் எரிவதற்கு Oxygen அவசியம் என்பதை 200 வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தனர்.ஆனால் அனைத்து உயிரினங்களும் சுவாசித்தலின் முலமாக Oxygenஐ சுவாசித்து ...