Posts

Showing posts from February, 2025

மனிதனின் உள்நோக்கிய பயணம் தியானம்

 ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல;  பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல.  இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும்.  ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும்.  எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்? பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான்.  பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை.  பெண்களுக்குக் கற்பனை அதிகம்.  சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள்.  சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்கு பெரிய அறிவாளி போல் தெரிகிறார்கள்.  அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.  அதனால்தான் ஏமாற்றம்.  எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது.  கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன?  இன்றோ நாளையோ எதார்த்த ...

ஏழையின் மதம் பணக்காரனின் மதம்

 *ஒரு ஏழையின் மதத்திற்கும்*, *ஒரு பணக்காரனின் மதத்திற்கும்* *அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு*. ஒரு ஏழை, மதத்தில் ஆர்வமுள்ளவனாக இருந்தால், அது வெறும் மாற்றுதான் (Substitute). அவன் கடவுளைப் பிரார்த்தித்தால்,  *அது தன் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இருக்கும்*. ஒரு மனிதனின் உண்மையான அடிப்படைத் தேவை, இன்னும் அவனிடம் ஏற்படவில்லை. ஏழைகளைப் பொறுத்தவரையில், மார்க்ஸ் மிகவும் சரியே. மதம், மக்களுக்கு போதைப்பொருள் போன்றது என்று அவர் சொன்னது ஒரு வகையில் சரியே. ஏனெனில் அவர்களால் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே, அதற்கு மாற்றாக பிரார்த்தனை, தியானம், யோகா மற்றும் மதம் முதலானவற்றைக் கையாளுகிறார்கள். ஆனால், பணக்காரனைப் பொறுத்தவரையில், அவனிடம் அடிப்படை மாற்றம் இருக்கிறது. அவன் இப்பொழுது பொருளாதார மேம்பாட்டைக் கேட்கவில்லை. *அவன் இப்பொழுது* *வாழ்வின்* *அர்த்தத்தைக் கேட்கிறான்*. கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர் மற்றும் சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்கள், இந்து மதத்தின் 24 அவதாரங்கள் அனைவரும் பணக்கார மக்களே. அவர்கள் எல்லாம் அரச குடும்பத்தில் பிறந்தவர்...

உண்மை தேடல் எது?

 பிறரை வேடிக்கை பார், என்ன செய்கிறார்கள் என்று பார்... நிழல்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். *தமக்குத் தேவையே இல்லாதவற்றை*, *விரட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்*. வெகு பிரயத்தனப்பட்டு ஒன்றை அடைய முயல்கிறார்கள்...  அப்படியே அதை அடைந்துவிட்டாலும், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியாக ஒன்றைத் தேடித்தான், அவர்களுடைய அத்தனை ஓட்டமும்... அப்படித்தான் பணத்தைத் தேடி... அரசியல் அதிகாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கைக்குக் கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் போய்விடுகிறது... ஒருத்தி, இன்னொருத்தியிடம்... " உன் வீட்டுக்காரரைப் பத்தி உனக்கு அக்கறையே இல்லையா ? என்றாள். பெண்களுக்குப் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கிறாரே... எந்தப் பெண் என்றாலும் சரிதான்... உனக்கும்தான் தெரியுமே " என்றாள். அவளோ சிரித்துக் கொண்டாள். " இதிலென்ன இருக்கிறது ?  நாய்கள் காருக்குப் பின்னால் குரைச்சுக்கிட்டு ஓடுவது போலத்தான்...  அவர் பெண்களுக்குப் பின்னாலே சுத்தறது என்றாள். முதலாமவள்...  " நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலயே ...